கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
பின்பு தமிழகத்தில் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழக முதவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உட்கட்சி பூசல்களால் தமிழக மக்களை நேரில் சந்திக்க இயலவில்லை மற்றும் அவர்களின் கோரிக்கைகளையும் கேட்கவில்லை ஆதலால் அவர் இன்று காலை அவர் (30/05/2017) க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.