உத்தரப் பிரதேச மாநிலத்தின் உனாவ் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த லோக்மான்ய திலக் அதிவேக விரைவுரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டது.
ரயிலின் எட்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகின. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தீவிரவாதத் தடுப்புப்பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.