பேன் கார்ட், ஆதார் கார்டுகளில் உள்ள திருத்தங்களை திருத்தம் செய்ய இணையத்தில் புதிய வசதி….

aathaar
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளில் உள்ள தவறுகளை திருத்த, வருமான வரித்துறையின் இணைய தளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.வருமான வரித்துறையின் இணைய தளத்தில், இரண்டு புதிய இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் இணைப்பில், பான் கார்டில் உள்ள தவறுகளை திருத்தவும் மாற்றங்களை ஏற்படுத்தவும் வசதி உள்ளது. அதே போல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். இதுபோல் மற்றொரு இணைப்பில் ஆதார் கார்டில் மாற்றம் செய்யவும், புதிய தகவல்களை இணைக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆவணகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் சிஎயவும் முடியும். இந்தியாவில் 111 கோடி பேர் ஆதார் கார்டு வைத்துள்ளனர். 25 கோடி பேர் பேன் கார்டு வைத்துள்ளனர். இதில் 6 கோர் மட்டுமே வருமானவரி கணக்கை சமர்ப்பிக்கின்றனர். இவர்களில், 1.22 கோடி பேர் மட்டுமே பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு வருமான வரி கணக்கை சமர்பிக்க, ஆதார் எண் முக்கியம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Leave a Response