கணவரை துப்பாகியால் சுட்ட மனைவி…!

gun-shot-couple
பெங்களூருவில் வசிக்கும் ஹம்சா (48), சாய்ராம் (53) தம்பதிக்கு திருமணமாகி சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இளம் வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார். தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சாய்ராமிற்கும் அவரது மனைவிக்கும் திருமண உறவு என்பது கசப்பாகவே இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு அந்த தம்பதி திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், உணவருந்த ஹோட்டல் ஒன்றில் தங்களது காரை நிறுத்தியுள்ளனர். அங்கு அவர்கள் மது அருந்தியுள்ளனர்.

தொடர்ந்து, வீடு திரும்பிய அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த ஹம்சா தனது கணவரை மூன்று முறை அடிவயிற்றில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சாய்ராம், தன்னை தற்காத்துக் கொள்ள காரில் இருந்து குதித்து அப்பகுதி வழியே வந்த மாநகர பேருந்தில் ஏறி தப்பியுள்ளார்.

ஆனாலும் தப்பிச் சென்ற கணவரை விடாமல் துரத்திய ஹம்சா, காரை தானே ஓட்டிச் சென்று அப்பேருந்தை வழிமடக்கி, தனது கணவரை மீண்டும் தாக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஹம்சாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் சாய்ராமை மருத்துவமனையிலும் அவர்கள் அனுமதித்தனர்.

கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாய்ராமின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதகாவும், ரத்த கசிவு நின்றதும் அடுத்தகட்ட சிகிச்சை தொடங்கப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், மது போதையில் இருந்த ஹம்சாவிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கணவன், மனைவிக்கிடையே திருமண உறவில் பிரச்னை இருந்தது என்றும், சம்பவ தினத்தன்று தன்னை தனது கணவர் தாக்கியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார். எனினும், அவருக்கு போதை தெளிந்த பின்னர், வாக்குவாதம் ஆரம்பித்து அது துப்பாக்கியால் சுடும் அளவுக்கு செல்ல காரணம் என்ன என்பது குறித்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response