நடிகை சாய் பல்லவி முதன் முதலில் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
‘பிரேமம்’ படம் மூலம் மலர் டீச்சராக இளைஞர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழுக்கு எப்போது வருவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.
ஆனால் முன்பு வந்த தகவல்படி, மலையாளத்தின் ஹிட் படமான ‘சார்லி’ படத்தை ஏ.எல். விஜய் தமிழில் சாய் பல்லவி வைத்து இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெண்களை மையப்படுத்திய ஒரு புது கதையாம்.
மற்றபடி படத்தை பற்றி இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.