பள்ளி மாணவர் எரித்து கொலை…..

aandiraa
ஆந்திராவில் நடந்த ரயில் தகராறில் மாணவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா மாநிலம் கடப்பா அருகேயுள்ள புனே வாலிபள்ளத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (17). இவர் திருப்பதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தேர்வு எழுதுவதற்காக கடப்பா ரயில் நிலையத்திலிருந்து மும்பை – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஊருக்குச் சென்றார். அப்போது அவருக்கும் தமிழக வாலிபருக்கும் ரயிலில் கதவு ஓரம் நிற்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

ரயில் ராஜம்பேட்டை ரயில் நிலையம் வந்த போது நவீன்குமார் மீது தமிழக வாலிபர் விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், உடல் கருகிய நிலையில் நவீன்குமார் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய தமிழக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Response