திடீரெனா தோன்றிய ராட்சத பனிப்பாறை: கனடா

panippaarai
கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து- லேப்ராடோர் பகுதிக்கிடையில் 150 அடி உயர ராட்சத பனிப்பாறை திடீரென தோன்றியதால், மக்கள் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.

பொதுவாக கடலுக்கடியில் அல்லது கடலின் மேற்பரப்பில் மிகவும் சிறிய அளவிலான பனிப்பாறைகள் வெளியில் தெரியும். தற்போது அங்கு வசந்தகாலம்.சீசனின் தொடக்கத்தில் பெர்ரிலேன்ட் கடற்பகுதியில் 150 அடி உயரத்திலான ராட்சத பனிப்றை நகர்ந்து வந்திருக்கிறது.இது அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதியில் மிகவும் அருகில் உள்ளதால், அவர்கள் தங்களது கேமராவில் பனிப்பாறையை படம் பிடித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது புவி வெப்பமயமாதல் போன்ற காரணத்தினால் ஆர்ட்டிக் கடற்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் 387 பனிப்பாறைகள் இதுபோல நகர்ந்து வந்துள்ளன. இந்த ஆண்டில் 616 பனிப்பாறைகள் இதுவரை நகர்ந்து வந்துள்ளன.

Leave a Response