ஊட்டியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை!..

heavy-rain-hits-ooty-last-night
ஊட்டியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் அங்கு வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது.

தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தையும் இந்த ஆண்டு மழை ஏமாற்றவிட்டது. அங்கும் வெயில் வாட்டி வைக்கிறது.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை மெல்ல பலத்து பேய்மழையாகப் பொழிந்தது. சூறைக்காற்றுடன் ருத்ரதாண்டவமாடிய மழையில் பெருமரங்கள் அடியோடு சாய்ந்து படுத்துவிட்டன. இரவு முழுக்க பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கோடை வெப்பத்தை விரட்ட இந்த மழை உதவியிருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Response