முற்றும் மோதல்:வெளியேறினார் டிடிவி

TTV
“கட்சியின் பல்வேறு தரப்பினரிடமிருந்து வெளியான அதிர்ப்தியின் காரணமாகா நேற்றே கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்”
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தன்னிடம் பேசியிருந்தால் தானே விலகியிருப்பேன் என்றும் கட்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் அதுமட்டும்மின்றி தனக்கு ஆதரவாக இருக்கும் சட்ட மன்ற உறுபினர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவிடம் அடுத்தகட்டமாக ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் அனைவரும் திடிரென இவ்வாறு பேசுவதற்கான பின்னணி என்ன என்பது தெரியவில்லை.தன்மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளபோது எவ்வாறு வெளிநாட்டிற்கு செல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் சசிகலாவிடம் ஆலோசனை கேட்டபிறகு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Response