சிறைச்சாலை சென்று சசிகலாவை சந்தித்த தினகரன்?..

sasikala
நேற்று காலை சென்னையிலிருந்து பெங்களுரு ஆக்ராஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க சென்ற தினகரன் மாலை 6மணிவரை சந்திக்கவில்லை. அங்கு காலை 10 மணிமுதல் மாலை 6மணிவரைக்கும் காத்துகிடந்த பத்திரிகை அன்பர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்து அங்கிருந்த சென்றனர்.

பின்னர் அங்கு காத்துக்கிடந்த பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து சென்றவுடன், தினகரன் இரவு 8-30முதல் 9-30 மணிகுள்ளக பெங்களுரு சிறைக்கு வேறு ஒருவருடைய காரில் சென்று சசிகலாவை சந்தித்து இருப்பதாக நம்பத்துகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. ஆனால் சிறைச்சாலையில் உள்ள பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை. பிறகு அவரை சந்தித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவர் சென்னைக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. டெல்லி காவல் துறையினர் தினகரனை கைது செய்வார்களா என்ற பொறுத்திருந்து பாப்போம்.

Leave a Response