திருமணமான இரண்டே நாளில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!..

thiruvan
திருவண்ணாமலையில் உள்ள தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமான இரண்டு நாட்களில் தன் கணவன் வீட்டிற்கு அருகில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கண்ணகி எனும் பெண் இரண்டு தினங்களுக்கு முன்பு தென்பள்ளிப்பட்டுவை சேர்ந்த ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான இரண்டு நாட்களில் தன் கணவனின் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை காவல்துறையினர் பெண்ணின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக மண்டல வருவாய் அலுவலரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடல் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Response