இன்று கவர்னரை சந்தித்த தி.மு.க தலைவர்கள்!…

vidy
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, திமுக தலைவர்கள் மும்பையில் இன்று(ஏப்ரல் 12) சந்தித்து பேசினர். பணப்பட்டுவாடா நடந்ததாக ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் கடந்த வாரம் ரத்து செய்தது.

முன்னதாக ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், திமுக தலைவர்கள் மும்பையில் இன்று கவர்னரை சந்தித்தனர். பணப்பட்டுவாடாவால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் இடைப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் கவர்னரிடம் வலியுறுத்ததினர்.

Leave a Response