திருப்பதி கோவிலுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட பாதம் காணிக்கை!..

thirppathi
அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் திருப்பதி கோவிலுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட பாதம் காணிக்கையாக கொடுத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் நேற்று தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார். அவர் ரூ.61 லட்சம் மதிப்பில் 2 கிலோ எடையிலான தங்கத்தால் செய்யப்பட்ட ஏழுமலையான் –பாதத்தை திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார்.

அதனை, திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அமெரிக்க பக்தர் லட்சுமி மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response