தமிழக புதிய தேர்தல் கமிஷனராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்!..

StateElection
தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட், தமிழக தேர்தல் கமிஷனுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இருப்பினும் அது முடியாது எனவும், தேர்தலை நடத்த மேலும் அவகாசம் வேண்டும் என தேர்தல் கமிஷன் ஐகோர்ட்டில் கேட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் கமிஷனராக இருந்த சீத்தாராமன் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த பதவி காலியாகவே இருந்து வந்தது.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய தேர்தல் கமிஷனராக மாலிக் பெரோஸ்கான் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2014 ல் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார்.

Leave a Response