ஓபிஎஸ் அணியில் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படம்: மாஃபா பாண்டியராஜன் தகவல்

mapa
மாஃபா பாண்டியராஜன் நாளை ஓபிஎஸ் அணியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. சசிகலா அணி, அதிமுக அம்மா என்ற பெயரில்,போட்டியிட, ஓபிஎஸ் அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் போட்டியிடுகிறது. மறுபுறம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்தநிலையில், ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மாஃபா பாண்டியராஜன் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவரது பிரசாரத்தின்போது, நாளை தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தமிழக மக்கள் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகளான எங்களையே ஆதரிப்பார்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் கண்டிப்பாக தோல்வியடைவது உறுதி என்றும் குறிப்பிட்டார்.

Leave a Response