கங்கை அமரனுக்கு ஆதரவு தருவாரா ரஜினி!

32cf8c00-f4f0-4b37-9462-63a37a6f0090_17108_1490112942688
இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.,நகரில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் கங்கைஅமரன் இன்று ரஜினி இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.

மேலும் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது. தனக்கு ஆதரவு தரும்படி கங்கை அமரன் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு மூலம் கங்கை அமரனுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் பல அரசியல் பிரமுகர்கள் சந்தித்தது போலத்தான் இதுவும் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்றும் பல முறை பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் வாய்ஸ் கொடுத்தும் அதற்கான பலன் எப்படி இருந்தது என்று அவர் உணர்ந்திருப்பார். இதனால் அவர் சமீப காலமாக வாய்ஸ் கொடுப்பதை நிறுத்தி விட்டார். தற்போது கங்கை அமரனுக்கு வாய்ஸ் கொடுப்பாரா என்பதும் சந்தேகமே ! கொடுத்தாலும் இது எந்த அளவிற்கு எடுபடும் என அரசியல் விமர்சகர்கள் மனதில் எண்ணம் ஓடுகிறது

Leave a Response