ராமேஸ்வரத்தில் இறந்த மீனவரும்! துப்பாக்கி குண்டும்

bullet
ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உயிரைக் குடித்த துப்பாக்கிக் குண்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த 21 வயதான பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மீனவர் சரோன் படுகாயமடைந்தார்.

நாடு முழுவதும் இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்தை கண்டித்து, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்ப்படி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, கிளிண்டன் என்பவர் அளித்த புகாரின் பேரில், இலங்கை கடற்படை மீது மண்டபம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உயிரைக் குடித்த துப்பாக்கிக் குண்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave a Response