இன்று முதல் 3 நாள் சுற்றுப்பயணம்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி

Edapadi_Palanisamy_002_16006
சென்னை ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். தொடர்ந்து பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்றுள்ளார்.சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல் மோதிய விபத்தில் கடலில் எண்ணெய் கொட்டி வாழ்வாதாரம் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிவாரண உதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான தனது சுற்றுப் பயணத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கவுள்ளார். மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.

Leave a Response