சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அனுமதி அளிக்கக்கூடாது ; கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி’க்கு ஆம் ஆத்மி கடிதம்…

sasikala
ஆம் ஆத்மி கட்சி சார்பில் காரைக்குடியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு சோமன் தலைமை தாங்கினார் . இந்த கூட்டத்தில் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா உள்பட மூன்று பேரையும் பெங்களூர் சிறையில் இருந்து மாற்ற அனுமதி அளிக்கக்கூடாது என்று கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி’க்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடிதம் அனுப்பட்டுள்ளது .

இவர்கள் மூவரும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தங்களை தமிழக சிறைக்கு மாற்ற கோரி மனு அளித்தவண்ணம் உள்ளனர்.

இவர்களுக்கும் தேவையான வசதிகளை பெங்களுறு சிறையில் செய்து தரவேண்டும் இதனால் அவர்கள் தமிழக சிறைக்கு மற்ற அவசியம் தேவைப்படாது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

Leave a Response