மீண்டும் தமிழில் நடிக்கும் துல்கர் சல்மான்

dulquer-salmaanமலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தமிழில் ‘வாயை மூடி பேசவும்’,’ஓகே கண்மணி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்குகிறார். இப்படத்திக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. துல்கர் சல்மான் நடிக்கும் இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிகிரார்கள். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷ், மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மற்றொரு நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பணிகள் மே மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Response