‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்


c0sitqjvqaanibcவிஜய் சேதுபதியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் படம் ‘புரியாத புதிர்’. இப்படம் வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகின்றது. ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இப்படத்தை, ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே சதீஷ் குமார். தற்போது தணிக்கையில் இப்படத்திற்கு U சான்றிதழ் கிடத்துள்ளது.

 இதுகுறித்து ஜே சதீஷ் குமார் கூறுகையில்,
“ஒரு படத்தின் வரி விலக்கை குறைப்பதில் U சான்றிதழுக்கு மிக பெரிய பங்கு உண்டு. அதை தவிர்த்து,  ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய கூடிய திரைப்படம் என்கின்ற அங்கீகாரத்தை  ரசிகர்கள் ஒரு திரைப் படத்துக்கு வழங்க வைப்பது  U சான்றிதழ் தான். தற்போது அந்த U சான்றிதழை, ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து நாங்கள் பெற்று இருக்கிறோம்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல். அந்த நல்ல நாளில்  அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்  எல்லா சிறப்பம்சங்களையும் எங்கள் படம் உள்ளடக்கி இருக்கின்றது. வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி புரியாத புதிர் படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். தொடர்ந்து வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை எங்களின் புரியாத திரைப்படம் பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்று கூறுகிறார் ஜே  சதீஷ் குமார்.

Leave a Response