ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் அஜீத் இரங்கல்


ajithமுதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். இவரது உடலுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் அஜித் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ‘மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்று நாம் பிரார்த்தித்து கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’.

என்று கூறப்பட்டுள்ளது.


 

Leave a Response