மீண்டும் செல்வராகவனுடன் இணையும் தனுஷ்


selvaraghavan_dhanush_vijaysethypathy_tசெல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமாகினார் நடிகர் தனுஷ்.

அதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்..

இந்நிலையில் மீண்டும் செல்வராகவனுடன் தனுஷ் இணையப்போவதாக செய்திகள் வெளியகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதையடுத்து சந்தானத்தை வைத்து படமொன்றை இயக்கவுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராஜ்கிரண், பிரசன்னா நடிக்கும் ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு கதை எழுதி வருகிறார்.

இந்த படங்களுக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என தெரிகிறது.


 

Leave a Response