நேற்று தரமணியில் முனுசாமி என்ற ஒருவரை வெள்ளை நிற ஆடி கார் அதிவேகமாக சென்று, அவர் மீது ஏற்றி கொன்று நிற்காமல் சென்றது. அதை பார்த்த பொது மக்கள் அந்த காரை துரத்தி சென்று பிடித்தனர். பிடித்த காருக்குள் பார்த்தல் மூன்று பெண்கள்! மூவரும் குடி போதையில் இருந்தனர். பிடிபட்ட காரும் அதி இருந்த மூன்சரு பெண்களும் காவல்துறையினரிடம் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யாப்பட்ட மூவரில் இருவர் விடுவிக்கப்பட்டு, காரை ஒட்டிய ஐஸ்வர்யா என்ற பெண் மட்டும் கிண்டி போக்குவரத்து காவல் துறையினரால் வழக்கு போடப்பட்டு, நீதி மன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதி மன்ற காவல் வழங்கியுள்ளது.
விபத்துக்குள்ளான காரை ஒட்டிய ஐஸ்வர்யாவின் முழு பெயர் ஐஸ்வர்யா வில்டன். அவருடைய தந்தையார் பெயர் ரோலன்ஸ் வில்டன் சோபத்ராஜ், தாய் பெயர் இசபெல் வில்டன். அவருக்கு பிராஜீத் வில்டன் என்ற ஒரு சகோதரரும் உள்ளார்.
ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பர்ன்ஸ் & பெட்டல்ஸ், ஆண்ஷோர் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் வேறு பல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்கள். இவர்களுடைய பூர்விக ஊர் நாகர்கோவில்.
ஐஸ்வர்யா, VIRTUSA என்னும் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த ஐஸ்வர்யா அவர் குடும்பம் செல்லும் கிறிஸ்துவ தேவாலயத்தில் பக்தி பாடல்கள் பாடுபவர் என்றும் அவருடைய குடும்பம் கிருஸ்துவ ஊழியங்களிள் மிக்க தொடர்பு உள்ளவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.