தமிழ் சினிமாவில் ஹீரோவை விட நெகடிவ் ரோலில் நடிக்கும் வில்லன்கள் பெயர் வாங்கி வருகின்றனர். என்னை அறிந்தால் படத்தில் கூட விக்டர் கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய் பேசப்பட்டார். தற்பொழுது அவரை போலவே நடிகர் விக்ராந்தும் நெகடிவ் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.
கெத்து படத்தில் நடிப்பதற்காக உதயநிதி விக்ராந்தை அணுகியபோது, நீ சொன்னதுக்காகவே நடிக்கிறேன். ஆனால் டம்மி வில்லனா மாத்திடாத, கெத்தான வில்லனா காட்டனும்னு கூறியுள்ளார். அதேபோல் விக்ராந்திற்கு இந்த படம், நல்ல பெயர் தேடித்தரும். அடுத்த வருடம் அவருக்கு சிறப்பாக அமையும் எனவும் கெத்து படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு படம் வெளிவந்த உடன் விக்ராந்த்தும் கெத்தான நடிகராக உருவெடுப்பார் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.