அர்னால்டில் ஆரம்பித்து அக்ஷய்குமாரில் முடிந்த எந்திரன் 2.0

arnold to akshay kumar endhiran 2 0

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் குறிந்து நீண்ட நாட்களாகவே சர்ச்சை நீடித்து வந்தது. உடல் நலக்குறைவால் கடினமான காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்ககூடாது என மருத்துவர்கள் கூறியதால் ரஜினி எந்திரன் 2ம் பாகத்தில் நடிக்கமாட்டார் என தகவல்கள் வெளியானது. அதன் பிறகு எந்திரன் இரண்டாம் பாகத்தில் அமீர்கான் தான் ஹீரோ என ஆரம்பித்து கமல், அஜித் என ஒரு பெரிய பட்டியலே வலம் வந்தது. ஆனால் இறுதியாக ரஜினி அடுத்த பாகத்தில் நடிப்பது உறுதியானது.

வில்லன் வேடத்தில் நடிக்கப்போவது யார் என மீண்டும் சர்ச்சைகள் ஆரம்பமானது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டை எப்படியாவது நடிக்கவைக்க வேண்டும் என ஷங்கர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரின் ஆசை கைகூடவில்லை. அர்னால்டில் ஆரம்பித்து, சஞ்சை தத், அணில் கபூர், ஜாக்கி ஷ்ரோப் என எந்திரன் 2.0வின் வில்லன் பட்டியல் நீண்டது.

அர்னால்டிற்கு பதில் வில்லனை தேர்வுசெய்யும் விஷயத்தில் மிகவும் கவனத்துடன் மேற்கொண்டார் ஷங்கர். இறுதியாக ரித்திக்ரோஷன் மற்றும் அக்ஷய்குமார் பெயர்கள் பரிசீலினையில் இருந்தது. அதில் ஷங்கர் மிகவும் எதிர்பார்த்தது ரித்திக்ரோசனை என முதலில் தகவல்கள் வெளியாயின. ஆனால் சமீபத்தில் வெளிவந்த க்ரிஷ் 3 படத்தில் நடிக்கும்போது ரித்திக் விபத்தில் சிக்கினார். இதனால் எந்திரன் படத்தில் சண்டைகாட்சிகளுக்கு அதிகம் முக்கியதுவம் என்பதால், அதற்கு ஏற்ப அவருடைய உடல்நிலை முழுத்தகுதி பெறவில்லை. எனவே இறுதி நேரத்தில் அவர் நடிக்கமுடியாமல் போய்விட்டது. இதனால் இறுதியாக அக்ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார்.

அர்னால்டில் ஆரம்பித்து ஒருவழியாக அக்ஷய் குமாரில் சர்ச்சை முடிந்தது.

Satheesh Srini

அன்பான வாசகர்களே, தொடர்ந்து ஒற்றன் செய்தி இணையத்தில் வெளியாகும் செய்திகளை படிக்க கீழே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்யவும். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க ஷேர் செய்யவும்.

Leave a Response