நடிகர் சங்க அறக்கட்டளையில் இணைந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார் கமல்:

image
நடிகர் சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று காலை சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் செயற்குழுவை நடத்தினர்.  பின்னர் பிற்பகல் 12:00 மணியளவில வெற்றிபெற்ற்  பாண்டவர் அணியை சார்ந்த நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன் மற்றும் மற்ற நிர்வாகிகள் அந்த அணியில் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள் ஒன்று திரண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் சங்கத்தின் புதிய பொது செயலாளர் நடிகர் விஷால், திரு. கமலஹாசன் அவர்கள் நடிகர் சங்க அறக்கட்டளையில் தன்னை இணைந்துகொள்ள சம்மதம் தெரிவித்துக்ளதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய விஷால், தற்போது பாண்டவர் அணியின் பெயர் சிலரால் மற்ற சங்க தேர்தலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். எனவே இனி வரும் காலத்தில் இந்த அணி நடிகர் சங்க அணியாக மட்டும் செயல்ப்படுமே தவிர தொடர்ந்து பாண்டவர் அணியாக செயல்ப்படாது என தெரிவித்தார்.

அங்கு பேசிய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணனிடம், தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பொன்வண்ணன், அந்த பெயர் மாற்றத்தை பற்றி இதற்கு முன்பு இருந்த நிர்வாகிகளிடமும் மற்றும் சட்ட ஆலோசகர்களிடமும் ஏதாவது சட்ட சிக்கல்கள் ஏற்படுமா என்பதை ஆலோசித்து எந்த பிரச்சனையும் இருக்காதபட்சத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றப்படலாம் என தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது, புதிய நிர்வாகிகளை வாழ்த்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு மற்றும் செயலாளர் டி.சிவா. பெப்சி தலைவர் சிவா, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பல சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  நடிகர் சங்க தேர்தலுக்கு முன்பு சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொல்லி சரத்குமார் அணியினரின் தேர்தல் பிரச்சார மேடையில், விஷால் மற்றும் கார்த்தியை அன்று படு கேவலமாக விமர்சித்தது இன்று சிரித்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்த தாணு மற்றும் செல்வமணி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response