ரமணா இந்தி ரீமேக்கில் என்ன ஸ்பெஷல்..?

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ரமணா’. தற்போது மீண்டும் இந்தப்படத்தை இந்தியிலும் ‘கப்பார்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள் என்பது சில மாதங்களுக்கு முன்பே தெரிந்த செய்திதான்.. இதில் என்ன சிறப்பம்சங்கள் என பார்க்கலாமா..?

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்தப்படத்தில் அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்க, தமிழில் ‘வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ் தான், இந்தியில் இந்தப்படத்தை இயக்குகிறார். தமிழில் ஆஷிமா நடித்த தேவகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். சிம்ரன் கதாபாத்திரம் கரீனா கபூருக்கும் யூகிசேது நடித்த கான்ஸ்டபிள் கதாபாத்திரம் பிரகாஷ்ராஜுக்கும் கிடைத்துள்ளது. விசாரணை அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார் சோனு சூட்.

மலையாளத்தை தவிர மற்ற மொழிகளில், ஏன் பெங்காலி மொழியிலும் கூட ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற எவர்கிரீன் ‘ரமணா’ இந்தியிலும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.. அந்த வகையில் வரும் ஏப்ரலில் வெளியாகவிருக்கும் இந்தப்படம் ரீமேக் நாயகனான அக்‌ஷய்குமாரையும் கைவிடாது என்று உறுதியாக நம்பலாம்..