24 தான் சூர்யாவின் 28..! ஏதாவது புரியுதா..?

‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக வெங்கட்பிரபு டைரக்ஷனில் ‘மாஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை விக்ரம் கே.குமார் இயக்குகிறார். சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மனம்’ படத்தை விக்ரம் குமார்தான் இயக்கியுள்ளார்.

இவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்துப்போகவே வெங்கட்பிரபுவின் படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்க சம்மதித்து விட்டார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயிண்மென்ட்’ நிறுவனமே தயாரிக்கிறது.

படத்திற்கு . 24’ என டைட்டில் வைத்துள்ளனர். இது சூர்யாவின் 28வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்கு இசையமைப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தையடுத்து இரண்டாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். மற்ற நடிகர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.