திருட்டுக்கல்யானத்துக்கு வக்காலத்து வாங்கும் பாக்யராஜின் சிஷ்யர்..!

‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்தவர் ரங்காயாழி. அதேபோல ‘மூடர்கூடம்’ படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்துபோனவர் தேஜஸ்வீ. இந்த இருவரும் தற்போது ‘திருட்டுக்கல்யாணம்’ என்ற படத்தில் ஹீரோ-ஹீரோயினாக நடிக்கிறார்கள்.. இந்தப்படத்தில் ‘ஆடுகளம்’ நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர தம்பிராமையா மற்றும் தேவதர்ஷினிக்கும் படத்தில் வெயிட்டான ரோல் உண்டு.

இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஷக்திவேலன். இவர் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் உதவியாளராக வேலைபார்த்த கார்த்திக் நல்லமுத்து தான் படத்தின் ஒளிப்பதிவாளர்.

ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கொள்பவர்கள் பற்றின கதையா என்று இயக்குனரிடம் கேட்டால் “திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கிறமா? திருக்கல்யாணம் பண்ணிக்கிறமா? என்பது முக்கியமல்ல.. கல்யாணம் பண்ணிகிறதும் சந்தோஷமா வாழ்றதும் தான் முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.” என்கிறார் புது விளக்கமாக.