அருண்விஜய்க்கு தைரியம் கொடுத்த ஏ.எம்.ரத்னம்..!

ரொம்ப நாட்களாகவே காற்றுவாக்கில் புகைந்துகொண்டிருந்த செய்திதான்.. கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித்தின் 55வது படத்தில் அரவிந்த் சாமியும் அருண்விஜய்யும் வில்லனாக நடிக்கிறார்கள் என்று ஒரு செய்தி பரவியதே.. அதைத்தான் சொல்கிறோம்.

ஆனால் “அந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை.. அதெப்படி தவறான செய்தியை நீங்கள் போடலாம்” என மீடியாக்களிடம் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார் அரவிந்த்சாமி. அதற்கடுத்து ஆதி வில்லனாக நடிக்கிறார் என்று செய்தி பரவ, அவரும் உடனே மறுப்பு தெரிவித்து பட்டியலில் இருந்து விலகிவிட்டார்.

அதனால் அருண்விஜய்யின் விஷயமும் இதுபோலத்தான் இருக்குமோ என்று ஒரு சின்ன டவுட் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் இப்போது அதை அருண்விஜய்யே க்ளியர் செய்துவிட்டார்.. “யெஸ்.. அஜித்தின் படத்தில் நானும் நடிக்கிறேன்.. நான் அமைதியாக இருந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் நடிப்பது பற்றி தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சமீபத்தில் நடைபெற்ற விழா மேடையில் அவராகவே சொல்லிவிட்டதால் நானும் இப்போது உங்களிடம் ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் பற்றி விரைவில் இயக்குனர் கௌதம் மேனனே உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என ட்விட்டரில் ஹாட் நியூஸ் தட்டிவிட்டிருக்கிறார்.