நெடுஞ்சாலை இயக்குனரின் அடுத்த படத்திலும் ஹீரோ ஆரி தான்..!

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தின் வெற்றி தமிழ்சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பவர்களுக்கு பூஸ்ட் கொடுத்திருப்பது உண்மை. இந்தப்பெருமை படத்தை இயக்கிய கிருஷ்ணாவையும் அதில் தனது முழு உழைப்பையும் கொடுத்து நடித்த கதாநாயகன் ஆரியையும் தான் சேரும்.

இப்போது இயக்குனர் கிருஷ்ணா தனது அடுத்த படத்திற்கான கதையையும் தயார் செய்துவிட்டார். ஒரு வித்தியாசமான காதல் கதையாக உருவாகும் இந்தப்படத்திலும் ஆரி தான் ஹீரோ. படத்திற்கு ‘மானே தேனே பேயே’ என டைட்டில்கூட செலக்ட் பண்ணிவிட்டாராம்.

கமல் பேசிய ஹிட் டயலாக்கான ‘மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்க’ என்பதில் இருந்து இந்த டைட்டிலை கையில் எடுத்துள்ளாராம் கிருஷ்ணா.