‘தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல – கார்த்தி..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ‘தேவ்’. ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், நடிகை ராகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார்.

பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.லக்ஷ்மன் தயாரித்து வருகிறார். 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கார்த்தி பேசும்போது:
தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான “மதுர வீரனை” தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.
 
இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.
 
ரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.
 
ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

Leave a Response