ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து 3 நாட்கள் ஆய்வு..!

ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து 3 நாட்கள் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை, இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர், இன்று முதல், மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, இந்திய விலங்குகள் நல வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, வாரிய தலைவர் எஸ்.பி.குப்தா, ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர், எஸ்.கே.மிட்டல் ஆகியோர் ஆய்வுக்காக தமிழகம் வந்துள்ளனர். ‘இன்று முதல், மூன்று நாட்களுக்கு, சென்னை, பெரம்பலுார் மற்றும் திருச்சியில் ஆய்வு நடத்தப்படும்’ என, விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response