குழந்தை வளர்ப்பை பற்றிப் கூற வரும் “லட்டு-குணமாக சொல்லுங்க”..!

கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அமுதா ஆனந்தின் தயாரிப்பிலும், ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளரான P. ராதாகிருஷ்ணனின் இணை தயாரிப்பிலும் உருவாகும் திரைப்படம் ‘லட்டு-குணமாக சொல்லுங்க.’

இந்தப் படத்தை இயக்குநர் சிகரம் K. பாலச்சந்தர் அவர்களிடம் படத் தொகுப்பாளராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் ‘இரும்புத்திரை’, ‘தமிழ் படம் 2.0’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘காளி’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் தவிர நடிகர் கேடி என்கிற கருப்பு துரையும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘பஞ்சராக்ஷரம்’ மற்றும் ‘சூப்பர் டூப்பர்’ போன்ற படங்களில் நடித்தவர் இவர். படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா அறிமுகமாகிறார். குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதை சொன்னாலும் குணமாக சொல்ல வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது. அம்மா இல்லாத இரட்டை குழந்தைகளை சிங்கள் பேரெண்ட்டான தந்தை ஒருவர் மட்டும் எப்படி வளர்க்கிறார் என்பதையும் அதைச் சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் இப்படத்தின் கதை பேசும்.

இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் துவங்கி ஓக்கேனக்கல், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே ஷெட்யூலாக தொடர்ந்து 35 நாட்கள் நடைபெறவுள்ளது.

Leave a Response