காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார்:சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் அறிவிப்பு..!

காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயார் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ஆர்கே நகர் தொகுதியின் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சசிகலாவை சந்தித்தார்.

அதன் பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகி எங்களை அணுகினால் கூட்டணி வைக்க தயார் என அவர் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்காது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Leave a Response