தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது-பொன்.ராதாகிருஷ்ணன்..!

தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது என்று பாஜக எம்பி. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்து இருக்கிறார்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் வெற்றிக்கு பின், பாஜக எம்.பி பொன்.ராதாகிருஷ்னன் முதல்முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டியளித்தார்.

இந்தியாவில் பாஜக பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறது. தமிழகத்திலும் பாஜக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. அடுத்த தேர்தலில் பாஜகவின் பலம் வெளியுலகிற்கு தெரியும். தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது.

தமிழகத்தில் திமுகதான் வலுவை இழந்து இருக்கிறது. அந்த கட்சி சரியான தலைவர் இல்லாமல் தவிக்கிறது. அந்த கட்சியில் கால்கள் உடைந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் அந்த கட்சிக்கு எம்.பியே இல்லை. அந்த அளவிற்குத்தான் திமுக தற்போது இருக்கிறது.

கமல்ஹாசனுக்கு தமிழக அரசியல் புரியவில்லை. அவர் உலகப்போரை பற்றி பேசுகிறார். ஆனால் மக்கள், அமைதியாக இருக்கவே விரும்புகிறார், என்று கூறியுள்ளார்.

Leave a Response