சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதுதொடர்பாக இயக்குநர் கவுதமன் கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கவுதமனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கவுதமன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.