திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழி சாலை:பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..!

திண்டுக்கல் தொடங்கி பொள்ளாச்சி வரை போடப்பட இருக்கும் 4 வழி தேசிய நெடுஞ்சாலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

சேலம் தொடங்கி சென்னை வரை போடப்பட இருக்கும் 8 வழி சாலை பெரிய பிரச்சனை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல லட்சம் மரங்கள் வெட்டப்பட இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதற்கு சற்றும் குறையாத வகையில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரை, 4 வழி சாலை போடப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் இருக்கும் விவசாய நிலங்கள் அடியோடு மாற்றப்படும். மொத்தமாக பலரது வாழ்க்கை மோசமாகும்.

பழனி அருகே புஷ்பத்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். புஷ்பத்தூர் கிராமத்தில் 60 வீடுகள், கோயில், சமுதாய கூடங்கள் பாதிக்கும் என மக்கள் அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மற்ற பகுதி மக்களும் இந்த போராட்டத்தில் விரைவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Response