தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்த காலத்திலும் சேர்க்க மாட்டோம்-அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்..!

தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்த காலத்திலும் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தகுதிநீக்கப்பட்ட 18 பேரை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்.

தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்தக் காலத்திலும் கட்சியில் சேர்க்கமாட்டோம். மாற்றான் தோட்டமாக இருந்தாலும் மதிக்கும் பண்பை பெற்றவர்கள் நாங்கள். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

Leave a Response