வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்..!

தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி வரும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா இன்று காரைக்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தினம் தினம் ஊழல் நடந்தது. தற்போதைய பாஜக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.

அதுபோல ஜிஎஸ்டி வரி விதிப்பினால், ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதுபோல, 7 கழிப்பறைகள் கட்டப்பட்டு ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படக் காரணம் தமிழக அரசில் இருக்கும் ஊழல் தான். ஆனால், சிலர் ஜிஎஸ்டி வரியை அதற்குக் காரணம் காட்டுகிறார்கள். அது திட்டமிட்ட சதி.

தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சில அமைப்புகள் கடந்த 3 மாதமாக சதித்திட்டம் தீட்டி வருகின்றன. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வரும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response