பெட்ரோலியம் நிறுவனத்தை கண்டித்து சென்னையில் இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம்..!

கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதை கண்டித்து சென்னை திருவொற்றியூரில் இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை துறைமுகம் முதல் மணலி வரை 14 கி.மீ.தூரத்துக்கு எண்ணெய் குழாய் பதிக்க பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டால் அதனால் தீவிபத்து ஏற்படும் என்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் மக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தை கண்டித்து திருவொற்றியூரில் இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Response