காவிரி விவகாரம் : கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க கமல் பெங்களூரு பயணம்..!

காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்காக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெங்களூரு சென்றுள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன். தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.

இதற்கான உறுப்பினர்களையும் தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், சினிமா தொடர்பாக கர்நாடகா முதல்வரை சந்திக்க செல்லவில்லை. காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்காக செல்கிறேன்.

மக்களைப் பொறுத்தவரை போராட்டங்களை நிறுத்த மாட்டார்கள். அவர்களது போராட்டங்கள் தொடரவே செய்யும். சட்டசபை கூட்டத்தில் திமுக பங்கேற்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

Leave a Response