144 தடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு..!

144 தடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் போலீசார் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டநிலையில் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response