“இரும்புத்திரை”படம் திரையிடும் திரையரங்குகளுக்கும்,காண வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ இரும்புத்திரை “ இதில் விஷால், சமந்தா அக்கினேனி,  அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது,

இரும்புத்திரை படத்துக்கு சில அமைப்புகளால் அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் வருகின்றன. எனவே தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் அகில இந்திய புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மனு கொடுத்துள்ளார்.

அதை பெற்றுக்கொண்ட காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Leave a Response