சிங்கத்துடன் இணையும் புலி !

தமிழில் கடைசியாக  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த படம்  தளபதி விஜய்யுடன் நடித்த ஜில்லா தான் . அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வருகிறார். இம்முறை நடிகர் சூர்யாவின் 37-வது படத்தில் அவருடன் இணைகிறார். படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். அமிதாப் பச்சன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக மோகன்லால் இணைவார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளார்.

தற்போது சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சூர்யா – கே.வி.ஆனந்த் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response