சட்டத்தை பொதுமக்கள் யாரும் கையில் எடுக்க வேண்டாம் : திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல் !

திருவண்ணாமலை, போளூர் அடுத்த அத்திமூர் அருகே குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்த மூதாட்டி & கொடூரமாக தாக்கப்பட்ட மலேசியாவை சேர்ந்த 4 பேர் கவலைக்கிடம். சம்பவம் குறித்து 200 பேர் மீது போலீஸ் வழக்கு, வேலூர் சரக டிஐஜி வனிதா & எஸ்.பி. பொன்னி போளூர் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை.

அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமானவர்கள் என நினைத்தால் காவல்துறையினரிடம் தான் தகவல் தெரிவிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

அதை விடுத்து பொதுமக்களே சட்டத்தை கையில் எடுத்து கொண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Response