வெற்றி பெற்றால் நடிப்பு இல்லாவிட்டால் குடும்ப தலைவி : ஸ்ரேயா..!

ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்தவர் சில வருடங்களுக்கு முன் சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார். தற்போது தமிழில் நரகாசூரன் என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்து வந்தார். அப்பட ரிலீஸுக்காக காத்திருந்தார். ஆனால் படம் பைனான்ஸ் பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போனது.

பொறுத்துப்பார்த்த ஸ்ரேயா, ரஷ்ய பாய்பிரண்ட் அன்ட்ரி கொஸ்சேவ் என்பவரை திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு முன்பாக அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை மட்டும் இதுவரை முடித்துக்கொடுத்திருக்கிறார். புதிய படம் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்துக்கு பிறகு நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கும் ஸ்ரேயா இதுவரை உறுதியாக பதில் அளிக்கவில்லை.

ஜோதிகா, சமந்தா போன்றவர்கள் திருமணத்துக்கு பிறகும் நடிக்க வந்திருப்பதால் ஸ்ரேயாவுக்கும் இன்னும் நடிப்பு ஆசை நெஞ்சின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எந்த படமும் கைகொடுக்காததால் மவுனம் சாதித்து வருகிறார். இந்தியில் இவர் நடித்துள்ள பாமவுஷ் படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. கரண் லிலித் புதானி இயக்கி உள்ளார். இப்படம் வெற்றி அடைந்தால் மீண்டும் நடிப்பை தொடர்வது அல்லது குடும்ப தலைவி பொறுப்பிலேயே வாழ்க்கையை தொடர்வது என முடிவு செய்திருக்கிறாராம்.

Leave a Response