மே 1 முதல் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம்..!

May 1 முதல் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம் என்று வைசாலி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

அதில் பேசிய அவர்-

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் ,இதை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம் .நான் தலைவர் வைசாலி சுப்பிரமணியன் , செயலாளர் ஈஸ்வரி V.P , துணை செயலாளர் மீனா மருதரசி .S , பொருளாளர் கீதா .M , துணை தலைவர் ஏஞ்சல் சாம்ராஜ் , நாங்கள் ஐந்து பேருதான் செயற்குளுவாக இருக்கிறோம் .இதனுடைய வேலைகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்று கொண்டிருந்தது .

இதை அதிகாரப்பூர்வமாக may 1 அன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் .இது தொடர்பாக FEFSI தலைவர் R.K.செல்வமணி சார் கிட்ட பேசினோம் , அவர் நல்ல விஷயம் நீங்க பண்ணுங்க என்றார் .இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் சார் எங்களை வாழ்த்தினார் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் P.C.ஸ்ரீராம் சார் வாழ்த்துக்கள் சொன்னார்.

இந்த விழாவிற்கு  P.C.ஸ்ரீராம் , வெற்றிமாறன் , சத்யராஜ் , ரோகினி , ரேவதி , சச்சு அம்மா , புஷ்கர் காயத்ரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள் , கீதா குருவப்பன் (sound engineer)  இவர்களெல்லாம் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர் .ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் .விழாவில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பாக ஒரு காலாண்டு மாத இதழ் வெளியிடுகிறோம் . இந்த் பத்திரிக்கையின் ஆசிரியர் ஈஸ்வரி V.P (மிஸ்கின் அசோசியேட்).

இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்திற்கு நிறைய பெண்கள் வரவேண்டும் .100 வருட தமிழ் திரைப்பட வரலாற்றில்  இது ஒரு வரலாறாக இருக்கும்  , அடுத்த தலைமுறைகள் இதில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அடித்தளம் இது .இதுக்கு உங்களுடைய ஆதரவும் வாழ்த்துக்களும் எங்களுக்கு தேவை , என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response