சசிகலா சிறைக்கு செல்ல தினகரன் தான் காரணம்-திவாகரன் குற்றச்சாட்டு..!

சசிகலா சிறைக்கு செல்ல தினகரன் தான் காரணம் என அவரது சகோதரர் திவாகரன் சாடியுள்ளார்.

தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்தினரிடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

திவாகரன் மகன் ஜெயானந்தும் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தினகரனை சாடி வருகிறார். இந்த நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சசிகலா சிறைக்கு போக தினகரனே காரணம் என்றார்.

மேலும், அதிமுக அம்மா அணி என்ற பெயரிலேயே நாங்கள் செயல்படுவோம். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்றும் திவாகரன் கூறினார்.

அத்துடன் தினகரனின் முதல்வர் கனவு நிச்சயம் பலிக்காது; இன்னும் 6 மாதத்தில் தினகரன் தனி மரமாக கைவிடப்படும் நிலை உருவாகும் என்றும் திவாகரன்

 

Leave a Response